SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்புபிரதேசங்களுக்கிடையில் நிர்மாணிக்கப்படவுள்ள சுருந்தாவசோக  விகாரை பணிகளை தடுத்து நிறுத்தியதாக இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

விகாரை அமைப்பு பணிகளை தடுத்ததன் மூலம் இனநல்லிணக்கத்தை பாதிக்க செய்ததாக ஜக்கிய தேசியக்கட்சியின் உள்ளுர் பிரமுகரான கலைச்செல்வன் என்பவர் இலங்கை காவல்துறையின் முல்லைதீவு காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான இளைஞர்கள் இருவரும் நேற்றிரவு நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.