SHARE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது. 

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை  10.30 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணியில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்  யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டிருந்தனர். 

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 

Print Friendly, PDF & Email