SHARE
image_pdfPRINT

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் பதின்ம வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

பன்னங்கண்டி பகுதியில் உள்ள இரணைமடு நீர்பாசன கால்வாய்க்குள் சடலம் ஒன்று காணப்படுவதாக ஊரவர்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரின் சீருடைக்கான இடுப்பு பட்டி (பெல்ட்) பேனாக்கள் , மோட்டார் சைக்கிள் திறப்பு , காற்சங்கிலி , உள்ளிட்ட தடய பொருட்களையும் பொலிசார் மீட்டு உள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணின் ஆடைகள் அலங்கோலமாக உள்ளமையால்,  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சடலத்தின் முக பகுதியில் கடும் காயங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாமையால் , பெண்ணை வேறு இடத்தில் இருந்து கடத்தி வந்து இருக்கலாம் எனும் கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.