SHARE
image_pdfPRINT

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன் வீதியில் இராணுவத்தினரால் பிரமாண்டமான தொலைக்காட்சி திரை (LED TV.) அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய முன் வீதியில் ஆலயத்திற்கு சுமார் 150 மீற்றர் தூரத்தில் செட்டித்தெரு சந்திக்கு அருகில் இந்த பிரமாண்ட தொலைக்காட்சி திரை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆலய சுற்று வீதிகள் கடந்த 16ஆம் திகதி முதல் வீதி தடைகள் போடப்பட்டு , வாகனங்கள் உட்பிரவேசிக்க தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நேர உற்சவ பூஜைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை , வீதி தடைகளை தாண்டி இராணுவத்தினர் தமது வாகனத்தில் வந்து இந்த பிரமாண்ட தொலைக்காட்சி திரையை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் குறித்த திரை பொருத்தப்பட்ட போதிலும் இன்று அதில் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.