SHARE
Michele Bachelet, Presidente of Chile speaks during Special Session of the Human Rights Council. 29 March 2017.
image_pdfPRINT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் மிசெல் பாச்ஷேலெட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனத்திற்கு அங்கீகரிக்காரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய ஆணையாளராக இருக்கும் செய்யித் ராத் அல் ஹுஸைன் இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையிலேயே இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் புதிய தலைவர் மிசெல் பாச்ஷேலெட் தனது கடமைகளை ஆரம்பிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.