SHARE
image_pdfPRINT

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப்பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ். முhநகரசபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நினைவுதூபி அமைந்துள்ள பகுதியின் புனிதத்தன்மையை பேணும்பொருட்டே குறித்த பிரமாண்ட விளம்மபப்பலகையை அகற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் இன்று மேற்படி கோரிக்கை கடிதத்தை யாழ். மாநகர சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நினைவுதூபியின் புனிதத்தன்மையை பேணும் பொருட்டு நேற்றய தினம் தூபினை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்ட நிலையிலேயே இன்று விளம்பரபலகையை அகற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவுத்தூபிக்கு பின்னால்; அமைக்கப்பட்டுள்ள குறித்த பிரமாண்ட விளம்பர பலகை அவ்விடத்தின் புனிதத்தன்மைக்கு இடையூறு எற்படுத்துவதாக உள்ளது என மக்களலும் பிரதிநிதிகளாலும் பலதடவைகள் விசனம் வெளிப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.