SHARE
image_pdfPRINT

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 ஜோதிட கலைஞர்களை குடிவரவு திணைக்களம் அதிகாரிகள் இன்று (09) கைதுசெய்துள்ளனர்.

யாழ்.நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இன்று நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச் சாட்டினர் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்