வயிற்று வலி தாங்க முடியாது , வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே அவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு , வயிற்றில் மூன்று இடங்களில் பிளேட்டினால் கீறியுள்ளார்.
அதனால் அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் உறவினர்களால் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.