SHARE

வடமராட்சி கிழக்கு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த செபமாலை சுஜீபன் என்பரின் படகே தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

கடந்த 20ஆம் திகதி முள்ளியான் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கையை சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்களை முள்ளியானை சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் தென்னிலங்கை மீனவர்களை பிடிப்பதற்கு உதவிய சுஜீபனின் 4 இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகு மற்றும் படகுக்கான வெளியிணைப்பு இயந்திரம் ஆகியவை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Print Friendly, PDF & Email