SHARE

கிளிநொச்சி, கல்மடு குளத்திலிருந்து ஆண்டு ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 63 வயதுடைய யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொழில் நிமிர்த்தம் நேற்று (17) வெளியே சென்றவர் வீடு திருப்பவில்லை என அவரது குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.