SHARE
image_pdfPRINT

தமிழ் தேசியம் பேசும் வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும் வடமாகாண பெண் அமைச்சர் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளார். என தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அதனை கூறும் போது அமைச்சரின் பெயரை பாவிக்காது , இங்குள்ள வடமாகாண பெண் அமைச்சர் என்றே விழித்து கூறினார்.

வடமாகாண அமைச்சர்களில் அனந்தி சசிதரன் மாத்திரமே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இன்றைய அமர்வில் அனந்தி சசிதரன் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.