SHARE

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தையின் இறுதிச் சடங்கில் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியதால் உறவினர்கள் குழப்ப நிலை ஏற்பட்டது.

குழந்தை உயிருடன் இருப்பதாக சிலர் நம்பிக்கை வெளியிட்டதால், தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெரியவர்கள் கூறியதையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியில் இன்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இரண்டரை வயது பெண் குழந்தை காய்ச்சல் பாதிக்கப்பட்டாள். குழந்தையை தெல்லிப்பளை வைத்தியசாலையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு 4 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் காய்ச்சல் நீடித்தமையால் பாலகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு 11 நாள்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு குழந்தை உயிரிழந்துவிட்டார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டது. சடலம் ந
நள்ளிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்கு இன்று (7) வீட்டில் நடைபெற்றுள்ளது. முற்பகல் 11 மணியளவில் குழ்ந்தையின் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை உயிருடன் உள்ளது என சிலரால் நம்பிக்கை வெளியிடப்பட்டது. அதனையடுத்து குழந்தையின் சடலம் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் இந்து முறைப்படி வழிபாடும் நடைபெற்றுள்ளது. எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டது என பெரியோர்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூறினர். அதனையடுத்து சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதால் யாழ். குடாநாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Print Friendly, PDF & Email