SHARE

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுயிருக்கின்ளார்.

இத் தாக்குதலைக் கண்டித்து கல்லூரியின் நுழைவாயிலில் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இன்று காலை 8 மணிமுதல் இப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டுமென்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email