SHARE

தன்னையொரு கிராம சேவகர் எனவும், சமாதான நீதவான் எனவும் அடையாளப்படுத்திப் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற நபரொருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு பதவிகளையும் கூறிப் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு இந்த நபர் முற்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட சிலர் கையும் மெய்யுமாகப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரைத் தடுத்துவைத்துப் பொலிஸார் விசாரணைகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email