SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்களால் கொடிகாமம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கச்சாய் வீதி , கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் (வயது 48) என்பவரே காணாமல் போயுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 21ஆம் திகதி கொழும்பு செல்வதாக கூறி சென்றவர் இன்றைய தினம் வரையில் (26ஆம் திகதி) தொடர்பு இல்லை என கூறியே குடும்பத்தினர் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.