யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வேன் ஒன்றை ஒரு கிலோ மீற்றர் தூரம் தனத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் மாலை இடம்பெற்றது.
தையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர், வேன் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கயிற்றைத் தனது பின்னம் தலைமுடியில் முடிச்சுப் போட்டுத் தொடர்ச்சியாக வேனை ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.