SHARE

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள கணவரான ஆனந்த சுதாகரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

3 மணித்தியாலங்கள் மட்டுமே மனைவியின் இறுதி நிகழ்வில் கந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய நெகிழவைக்கு சம்பவம் இடம்பெற்றது.

தாயின் இறுதிக்கிரியைக்காக மகன் மயானம் நோக்கி புறப்பட மறுபக்கத்தில் மகள் தந்தையுடன் சிறை நோக்கி புறப்பட்டது அங்கிருந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுதாகரன கைது செய்யப்பட தாயின் அரவணைப்பில் வழ்ந்த இரண்டு பிள்ளைகளும் இன்று இருவரையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email