SHARE
image_pdfPRINT

‘பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்’ என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உறுதியளித்துள்ளார்.

அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து நடைபெறவுள்ள இரு விவாதங்களிலும் ஆணையாளர், இலங்கைக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இலங்கை குறித்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும் எடுத்துரைப்பார் என தெரியவருகிறது.