SHARE
image_pdfPRINT

இலங்கை முழுவதும் கைதொலைபேசி வழியிலான இணைய சேவை முற்று முழுதாக தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் பதற்றகரமான சூழலினைத் தொடர்ந்து பிறப்பிக்கப்படுள்ள ஊரடங்கினையும் மீறி ஆங்கங்கே கலவரங்கள் நடைபெற்று வருவதற்கு சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வீடியோக்கள் புகைப்படங்களே காரணம் என்ற அடிப்படையில் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.