SHARE

கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை நிரூபித்துள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவையே. அந்த விமர்சனங்கள் சில கடுமையானவையாகியிருக்கலம். ஒற்ரியாடிசிக்கு இணங்கி பௌத்தத்தின் முன்னுரிமைக்கு இணங்கியதாலே அவ்வாறு விமர்சனங்கள் எழுந்தான.

நாம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் எதிரானவர்கள் இல்லை. தமிழினம் நடுத்தெருவில் நிற்க தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் நீக்கப்பட்டு உள்ளூராட்சி சபையை நடத்த கறைபடியா கைளுடனான நல்ல தலைமைத்துவம் அமைந்தால் ஒருமித்து பயணிப்போம்.

அதேவேளை தமிழ் தேசியத்தை காப்பாற்ற பாத்திக்கப்பட்ட நிலப்பரப்பை மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டியவர்கள் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email