
தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவுநாள் இன்று பிரித்தானியாவில் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பு’ ஆனது, இந்த நிகழ்வினை ஏனைய பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள டவுனிங் வீதி 10ஆம் எண்ணிலுள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான ஈழ உணர்வாளர்களின் பங்கேற்புடன் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்ததோடு, கலை, பண்பாட்டு ரீதியான தேசிய உணர்வெழுச்சி நிகழ்ச்சிகளும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்களால் மாலை 4:00 மணி வரையில் சிறப்பான முறையில் நிகழ்த்தப்பட்டிருந்தது.
அன்னை பூபதி அவர்களை தாயகத்தில் எம் உறவுகள் நினைவேந்துகின்ற சம நேரத்தில், பிரித்தானியாவில் இந்த தேசிய உணர்வெழுச்சி நிகழ்வானது வானிலை சீர்கேட்டுக்கு மத்தியிலும் ‘தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால்’ சிறப்பான முறையில் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு மகத்தான தியாகத்தின் அடையாளம். அவரது நினைவு நாளில்இ அவரது இலட்சியங்களை நிலைநாட்டும் விதமாகஇ உலக சக்திகளிடம் வலியுறுத்தவே அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறோம் என்றார்கள்.
இதனிடையே குறித்த நினைவு நிகழ்வினை முன்னெடுத்த தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில்,
எமது தமிழீழத் தாயகமானது, சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் அரச நிர்வாக அலகாக வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு எம் தாயக நிலப்பரப்பின் கிழக்கு மாகாணமானது ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதத்தின் பிடிக்குள் சிக்கி மெல்ல மெல்ல முழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பேரினவாதக் கைக்கூலிகளாகச் செயற்படும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற எம் இனத் துரோகிகள் மறுபக்கம் பிரதேசவாதம் பேசிப் பேசி எம் மக்களிடையே குரோதங்களை வளர்த்து அதில் குளிர் காய்ந்துகொண்டிருந்தாலும், துரோகிகளின் மூளைச்சலவைப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தமிழ்த் தேசியத் துரோகிகளின் எதிர்பார்ப்புகளில் கரிபூசிவிட்டு, ‘தமிழீழம்’ எனும் தனித்த தன்னாட்சித் தேசத்தின் எம் தமிழ் உறவுகள் இதுபோன்ற தேசிய உணர்வெழுச்சிச் செயற்பாடுகளில் ஒருமித்துக் கரம்கோர்த்து நிற்பதன் மூலமாக, “தமிழீழம்” எனும் பெருங்கனவை நிச்சயம் ஒன்றுபட்டு வென்றெடுப்போம் என்பதை உலகிற்கு உரக்கக் சொல்லியிருக்கின்றனர் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.







