SHARE
image_pdfPRINT

பிரித்தானியாவில் இன்று மாவீரர் பெற்றோர் மற்றும் உருத்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் கார்த்திகை மாதத்தில் இன்றைய தினம் (17) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மேற்படி நிகழ்வு முன்னெடுக்கப்ட்டது.

காலை 11.00 மணியளவில் பண்ணிசை அணிவகுப்படன் மாவீர்ர் குடும்பங்கள் உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்திற்கு வரவேற்கப்பட்டு பின்னர் அங்கு அமைக்கக்பட்டுள்ள பிரமாண்ட மண்டபத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.