கறைபடிந்த கறுப்பு யூலை தமிழினப்படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தமிழினத்திற்கு இழைக்கட்ட அநீதிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் சற்றுமுன்னர் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக பெருமளவில் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள், 1983 ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து தமிழினம் மீதும் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரியும் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் பிரித்தானிய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் நேரலை காட்சிகளை எமது நமது ஈழநாடு YouTube வழியாக காணலாம்
https://www.youtube.com/live/gMrsOjWdL_E?si=7-7ch_c1gyb25OJO


