SHARE

நிபந்தனைகயின் அடிப்படையில் பிரித்தானியாவின் கன்சர்வேர்ட்டி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செயலாற்றிவரும் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் குழு அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான Hon. Steve Tukwell MP அவர்களின் பிரச்சார பணியில் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இஎதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஆளும் கட்சியான கன்சர்வேர்ட்டிவ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பெரும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொள்ள தமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் புலம் பெயர் தமிழர்களும் வாக்குகளின் எண்ணிக்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளாக உள்ளனர் என்பது மறுப்பதுக்கில்லை.

இந்நிலையிலேயே இந்த சர்ந்தப்பத்தினைப்பயன்படுத்தி தமிழினப்படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும் வழங்கவேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கைகோர்த்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொண்டு நீதி வழங்குவதோடு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானியா தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழர்களின் தனிநாட்டு தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார பணியில் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் பெருமாள் தலைமையில் சிவதீஸ்வரன் கஜந்த், துரைசிங்கம் துவாரகன், திரு சிவகாந்த், அலகரத்னம் நிரோஜன், சந்திரவர்மன் மேகலக்சன், நிலானி சந்திரபர்மன், யோகானந்தம் ஜெஸ்லின் உதயராணி, ரூபன் மதியாஸ், அன்ஜெலோ நிருசான், இன்பராஜ் பத்தினத்தார், பவானந்தன் தர்மகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email