
பிரித்தானியாவின் பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இதில் தமிழினப்படுகொலைக்கான நீதி மற்றும் தனித்தமிழீழ கொள்கைக்கு ஆதரவம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கான ஆதரவுப்பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே எதிர்வரும் யூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ; Devid Pinto Duschinsky இற்காக கடந்த சனிக்கிழமை (8) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் கீத்குலசேகரம் இளையோர் ஒருங்கிணைப்பாளர் லக்சன் தாமேதரன், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையிலான புகழினியன் விக்டர் விமலசிங்கம், சுபேக்கா வேலுமகிழும், அனுஷன் பாலசுப்ரமணியம் ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு பிரச்சாரப்பணியில் ஈடுபட்டனர்.
