SHARE
image_pdfPRINT

சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் Dr.Agnès.Callamard முள்ளிவாய்காலில் அஞ்சலி செலுத்தினார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளார்.

நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர் இன்று முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.

அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில்; தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.