SHARE

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 உண்மைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று (19) வழங்கியதாக கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.

மின்னஞ்சல் மூலம் சஹாரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளால் வெளிப்படுத்தப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமை, கைது செய்யாமை போன்ற எட்டு உண்மைகளை அவர் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email