யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று (1.1.2023) மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரை நோக்கி விரைந்து தீயை அணைத்துள்ளனர்.
இதன்போது, செல்வரத்தினம் சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே எரிக்கப்பட்டுள்ளதோடு பத்து இலட்சம் பெறுமதியான வலைகளும் தீயில் எரிந்துள்ளன.