SHARE

ஆலயமொன்றில் தேவாரம் பாடியவாறே முதியவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 88 வயதான சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வழமை போல் ஆலயத்திற்கு சென்று தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை அவர்  மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email