SHARE
image_pdfPRINT

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில் அது குறித்து விழிப்படைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.