SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அனுமதி பெறப்படாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என அரச உயர்மட்டங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்தும், தனி ஆள்கள் இருவரிடமிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி கையாளுகை மற்றும் அனுமதிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.