SHARE

வாகனத்துடன் கொழுத்துவேன் என கொலை அச்சுறுத்தல் விடுத்த பிக்கு

மட்டக்களப்பு எல்லைப்பகுதியான மாதவனை மயிலத்தமடுவிற்குச் சென்ற மட்டக்களப்பு பல்சமூக ஒன்றிய பிரதிநிதிகளை சுமார் 4 மணி நேரங்களிற்கு மேலாக தடுத்து வைத்திருந்த பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான சிங்கள காடையர்கள் அவர்களுக்கு கடும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

மயிலத்தமடு பண்ணணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்களின் அழைப்பை ஏற்று இரு கிறிஸ்தவ குருமார்கள், தலா ஒரு இந்து, முஸ்லிம் குருமார்கள், 2 ஊடகவியளார்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் அடங்கலாக 9 பேர் கொண்ட குழு அங்கு சென்று கலந்துரையாடி பின்னர் திரும்பி கொண்டிருக்கையில் தீடீரென வாகனத்தை மறித்த பிக்கு தலைமையிலான சிங்கள காடையர்கள் குழு அவர்களை சுமார் 4 மணி நேரங்களாக தடுத்து வைத்திருந்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முயிலத்த மடு பிரடதேசத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியிருப்பாளர்களை ஒன்று திரட்டிக்கொண்டு வந்த பௌத்த பிக்கு ஒருவரே வாகனத்தை வழிமறித்து சாரதியிடமிந்து வாகனத்தின் சாவியை அடாத்தாக பறித்தது மாத்திரமல்லாமல் வாகனத்துடன் அனைவரையும் கொழுத்துவேன் என்றும் பகிரங்கமாக கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களின் கமெராக்களில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அந்த இடத்திலேயே அவர்களின் முன்னால் வைத்து அவற்றை அழிக்க செய்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்து குரு ஒருவரின் தலையில் பிடித்து அவரை தாக்க முற்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களின் காசை வாங்கி தங்களிற்கு பிரச்சினை ஏற்படுத்த வந்த குழுவினர் எனக் கூறி அவர்களை காணொளி எடுத்ததுடன் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி வெள்ளைத் தாழில் குழுவினரிடம் பிக்கு கையெழுத்தும் பெற்றுள்ளார்.

3 மணி நேரத்திற்கு பின்னரே சம்ப இடத்திற்கு பொலிசார் வந்த போதும் பிக்குவின் அடாத்தான செயற்பாடுகளால் குழுவினர் தொடர்ந்தும் பணயக்கைதிகள் போல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email