SHARE

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு மாநாடு

தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு எனும் தலைப்பிலான சிறப்பு மாநாடு பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் புதன் கிழமை (14.06.2022) நடைபெறவுள்ளது

பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் பிரித்தானிய அரசியர் தலைவர்களும் இணைந்துகொள்ளும் இச் சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக தாயகத்திலிருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளும் சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலதிக தொடர்புகளுக்கு
கீத் குலசேகரம் – 07930 236698
ஜேக்கப் – 07852 730225

Print Friendly, PDF & Email