SHARE

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன் போது பொது மக்கள், வர்தகர்கள், சாரதிகள் என அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம் மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

அருட்தந்தைகள், பொது மக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email