SHARE
image_pdfPRINT

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கும் இலங்கை ஜனாதிபதியின் முடிவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

சக அரசியல்வாதியை கொலை செய்தார் என தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தும். பொறுப்புக்கூறலை அலட்சியப்படுத்தும்.

தெரிவு செய்யப்பட்ட தன்னிச்சையான பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கைக்கு சிறந்த உதாரணம் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.