வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பிய சமயத்தில் இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கால்கள் நன்கு தரையில் தொடும் வரையில் இடம்பெற்றுள்ள மரணம் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையிரனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.