SHARE

தேசிய தௌகித் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான விசேட அதிகாரத்தின் கீழ் இந்த அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்பவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email