SHARE

கோனகங்ர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email