SHARE

சந்திரிக்கா அரசின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டு யாழ் செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை நீதியான விசாரணைகள் ஏதும் நடைபெற்றிருக்காத நிலையில் அந்தச் செம்மணிப் புதைகுழியின் மேல் புதிய நகரம் ஒன்றை கட்டியெழுப்பப் போவதாக யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் இன்று யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் தனது புதிய நகரத்திட்ட மாதிரி முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது,

 “யாழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமாா் 293 ஏக்கா் நில பரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம்.

இதற்கு தேவையான 293 ஏக்கா் நிலப்பகு தி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது.  இந்நிலையில் கடந்த முறை பிரதமா் ரணில் விக்கிரம சிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித்த முன்னோட்டத்தினை

பிரதமாின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அப்போதே அதனை வரவேற்ற பிரதமா் உடனடியாக தன்னை வந்து சந்தித்து உாிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தாா். அதற்க மைய நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடா்பாக விாிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம்.

அதில் எமது திட்டத்தை நடை முறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆழுகைக்குள் இருப்பதனையு ம் சுட்டிக்காட்டியிருந்ததற்கு அமைவாக, பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கா் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தொிவித்தது.

அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணா்களை அழைத்துவந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிாி ஒன்றையும் தயாா் செய்துள்ளோம். அதனை இன்று பிரதமா் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமா்பித்தபோது அதனை பகிரங்கமாக வரவேற்ற பிரதமா் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளாா் என கூறினாா்.

இதேவேளை குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடா்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது” – என்றார்.

Print Friendly, PDF & Email