SHARE

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார்.

தமிழ் மொழி பேசுபவர்களையே அதிகம் கொண்ட வடமாகாணத்தில் ஆளுநரின் மக்கள் தொடர்ப்பு அதிகாரியாக உள்ளவர், தனி சிங்கள மொழியில் எழுதப்பட்ட பெயர்பலகையுடன் வடமாகாணத்தில் தனது வாகனத்தை செலுத்தி வருகின்றமையை அவதானிக்கமுடிகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற கையுடன், வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அத்துடன், வடமாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமையில் ஐவரடங்கிய சிறப்புக் குழுவொன்றையும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் மக்கள் தொடர்பு  அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் மட்டும் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.

மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இந்தச் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Print Friendly, PDF & Email