கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் காலியை சேர்ந்த 23 வயதுடைய கடற்படை சிப்பாயே கைது செய்யப்பட்டு உள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 27 கிராம் 7 மில்லிகிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதாகவும் , அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்,


